கழுத்தில் உள்ள கருமையை ஒரே நாளில் போக்கவேண்டுமா ? அதற்கான அற்புத வழிமுறை இதுதான்!

கழுத்தில் உள்ள கருமையை ஒரே நாளில் போக்கவேண்டுமா ? அதற்கான அற்புத வழிமுறை இதுதான்!

காது, கழுத்து பகுதியில் படிந்திருக்கும் கருமையை போக்க பல்வேறு வழிமுறைகள் இருந்தாலும் விரைவில் போக்க சில எளிய வழிகள் உண்டு. அவை என்னவென்று பார்க்கலாம்.
கழுத்தில் உள்ள கருமையை நீக்கும் எளிய வழிமுறை
முகத்தைப் பராமரித்து அழகாக வைத்துக் கொள்ளும் நாம் கழுத்துப் பகுதியை, குறிப்பாக கழுத்தின் பின்பகுதியைப் பற்றி அக்கறை கொள்வதே கிடையாது. குளிக்கும்போதும் நாம் பெரிதாகக் கண்டுகொள்ளாத பகுதியென்றால் காதும் பின்பக்க கழுத்தும் தான். காது, கழுத்து பகுதியில் படிந்திருக்கும் கருமையை போக்க சில எளிய வழிகள் உண்டு.
அவை என்னென்ன?

எலுமிச்சைச் சாறு ஏராளமான பிரச்னைகளுக்குத் தீர்வாக அமைகிறது. அதிலும் குறிப்பாக, சருமப்பராமரிப்பில் எலுமிச்சையின் பயன்பாடு மிக அதிகம். கழுத்தின் கருமையைப் போக்குவதிலும் எலுமிச்சைச்சாறு அதிவேகமாகச் செயல்படுகிறது.


எலுமிச்சை சாறுடன் சமஅளவு ரோஸ்வாட்டரை எடுத்துக் கொண்டு கலந்து, இந்த கலவையைக் பின்பக்க கழுத்தில் அப்ளை செய்ய வேண்டும். தினமும் இரவு தூங்கச் செல்லும் முன்பாக, இந்த சீரமை அப்ளை செய்துவிட்டுப் படுத்து, அடுத்த நாள் காலையில் நன்கு தேய்த்துக் கழுவ வேண்டும். தொடர்ந்து ஒரு மாதம் வரையிலும் இதைச் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.


ஓட்ஸை மிக்ஸியில் போட்டு நன்கு பொடி செய்து கொள்ள வேண்டும். ஓட்ஸ் பொடியுடன் சிறிதளவு தக்காளி ஜூஸைக் கலந்து பேஸ்ட் செய்து கொண்டு, கழுத்தில் அப்ளை செய்து, 20 நிமிடங்கள் வரையிலும் காய விடவேண்டும். அதன்பின், நன்கு தேய்த்துக் கழுவவும். இது சருமத்துக்கு நல்ல மாய்ச்சரைஸராகப் பயன்படும். சருமத்திலுள்ள இறந்த செல்களைப் புதுப்பிக்கும். கழுத்திலுள்ள கருமை மாயமாய் மறைந்து போகும்

ப்ரோஸ்டேட் வீக்கம், நீரிழவு மற்றும் கொலஸ்ட்ரால் போன்ற மூன்றுமே ஆண்களை பாதிக்கும் நோய்களாகும். இந்த மூன்று நோய்களியயும் குண்மாக்கும் சக்தி பூசணிக்காயில் உள்ளது

பூசணிக்காய் ஒரு சுவையான காய் மற்றும் பல்வேறு நன்மைகளை கொண்டது.ஆனால் அதனுடைய விதை மிகவும் சக்தி வாய்ந்தவை.


பூசணிக்காய் விதையில் பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன.அத்துடன் பல்வேறு சுகாதார நலன்களை உள்ளடக்கியது.இந்த விதையில் மிகவும் முக்கியமான குயூகர்பிட்டேசின் உள்ளது.இது புரோஸ்டேட் விரிவைக் குணப்படுத்துவதுடன் மற்ற பிரச்சனைகளையும் குணமாக்கும்.



புரோஸ்டேட் விரிவு,சர்க்கரை நோய் மற்றும் அதிக கொலஸ்ட்ரால் இவற்றை குணமாக்க கூடிய ஒரு பானத்தை எவ்வாறு தயாரிக்க வேண்டும் என்று பார்க்கலாம்.பூசணிக்காய் விதை டீ இது மிகவும் எளிதான ஒன்று தயாரிப்பதற்கும்,உபயோகப்படுத்துவதற்கும்.இதற்குத் தேவையான பொருட்களை பார்ப்போம்.



தேவையான பொருட்கள்:ஒரு கப் தண்ணீர்.

ஒரு கையளவு பூசணி விதை.

நன்மைகள் :பூசணி விதை ஒரு சிறந்த சிறுநீர் பிரிப்பு(அதிகமான சிறுநீரை வெளியேற்றும்)ஆகும்.இவ்வாறு சிறுநீரை வெளியேற்றுவதால் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும்.

நன்மைகள் :
வீக்கத்தை குணமாக்கக் கூடிய அலர்ஜி நீக்கியாகவும் செயல்படுகிறது.

பூசணி தேநீர் தயாரிக்கும் முறை :இந்த டீயைத் தயாரிக்க செய்ய வேண்டியது பூசணி விதையை பொடியாக்கி ஒரு பானை நீரில் கலக்க வேண்டும்.இந்தக் கலவையை 15 நிமிடங்கள்கொதிக்க விட வேண்டும்.

பூசணி தேநீர் தயாரிக்கும் முறை :பின்பு அதை வடிகட்டி விட வேண்டும்.இப்போது பூசணி விதை டீ ரெடி.இதை நீங்கள் பருகலாம்.இவ்வாறு செய்து தினமும் ஒரு கப் குடித்து வந்தால் உடலில் எந்த பிரச்னையும் வராது.

கருத்தடை முறைகள், மாதவிலக்கின் போது சுகாதாரமின்மை மற்றும் கிருமித்தொற்று போன்ற காரணங்களால் கருப்பை வாய் மற்றும் கருப்பை புற்றுநோய்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாகிறது.
கருப்பைப் புற்றுநோயின் அறிகுறிகள்?

உறவின் போதும் அதற்கு பின்பும் ரத்தம் வெளிப்படும்.

வெள்ளைப்படுதல் பிரச்சனை அதிகமாக இருக்கும்.

வெள்ளைப்படுதலுடன் சிறிது ரத்தமும் கலந்து வெளிவரலாம்.

இரண்டு மாதவிடாய்க்கு இடையில் அடிக்கடி ரத்தம் வெளிப்படும்.

இது போன்ற அறிகுறிகள் தென்பட்டால், கருப்பைப் புற்றுநோய்க்கான பரிசோதனை செய்ய வேண்டியது மிகவும் அவசியம்.

மேலும் அதிக ரத்தப்போக்கு, மாதவிலக்கு நேரத்தில் அதிக வலி, மாதவிலக்கு நின்ற பின் உடல் எடை அதிகரிப்பு போன்ற அறிகுறிகளும் தென்படலாம்.
கருப்பைப் புற்றுநோய் யாருக்கு ஏற்படும்?

பரம்பரை கருப்பை புற்றுநோய், ஹார்மோன் மாற்றம், சர்க்கரை அளவு அதிகரித்தல், உடல் எடை அதிகரிப்பு இது போன்ற பிரச்சனை உள்ளவர்களுக்கு கருப்பைப் புற்றுநோய் ஏற்படும்.
கருப்பைப் புற்றுநோயிக்கு சிகிச்சை உள்ளதா?

HBV வைரஸ் மூலம் ஏற்படும் கருப்பைப் புற்றுநோயில் இருந்து பாதுகாத்துக் கொள்ள தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் பேப்ஸ்மியர் டெஸ்ட் மூலம் கருப்பை வாயில் புற்றுநோய்க்கான அறிகுறி உள்ளதா என்பதை சோதிக்க வேண்டும். பயாப்சி மற்றும் பேப்ஸ்மியர் சோதனைகள் மூலம் புற்றுநோய் கண்டறியப்படுகிறது.
கருப்பை புற்றுநோயை தடுக்க பின்பற்ற வேண்டியவை?

உடல்எடை அதிகரிக்காமல் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டியது மிகவும் அவசியம். உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும் உணவுகளை தவிர்த்து, தினசரி உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

புற்றுநோய் ஏற்படுவதை தடுக்க, சாதத்தின் அளவைக் குறைத்து, காய்கறிகள், பழங்கள் மற்றும் ஆவியில் வேகவைத்த உணவுகளை சாப்பிட வேண்டும்.

புரதம் நிறைந்த உணவை தவிர்த்து, முட்டைக் கோஸ், காலிஃபிளவர், முளை கட்டிய பயறு வகைகள் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

கர்ப்பப்பை நோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்?

கருப்பை கோளாறுகள் வராமல் தடுக்க, அசோகமரத்தின் பட்டையை பொடி செய்து, பாலில் கலந்து குடிக்கலாம்.

அசோகமரப்பட்டை, மாதுளம் பழத்தை காய வைத்து பொடி செய்து, தினமும் காலை, மாலை 3 சிட்டிகை அளவுக்கு தண்ணீரில் கலந்து குடிக்க வேண்டும்.

ஆலமரப் பட்டையை பொடி செய்து, பாலில் கலந்து குடித்து வந்தால் கருப்பை வீக்கம் குணமாகும்.



அருகம்புல் வேருடன் வெண்ணெய் சேர்த்து அரைத்து சாப்பிட்டு வந்தால், வெள்ளைப்படுதல் பிரச்னை குணமாகும்.

தினமும் காலையில் கரிசலாங்கண்ணி கீரையின் சாற்றை 30 மில்லி சாப்பிட்டு வந்தால், ஆரம்ப நிலையில் உள்ள புற்றுநோய் குணமாகும்.