ஆயுர்வேத சிகிச்சை முறையில் தலை முடி உதிர்வை எவ்வாறு கட்டுப்படுத்தலாம்
ஆரோக்கியத்துக்கும் ஒருபடி மேலாக அழகுக்கு அக்கறை செலுத்தும் காலம் இது. அந்த வகையில் ஆண், பெண் இருபாலாருக்குமே தலைமுடி உதிர்வு பிரச்சினையாக உள்ளது.
நம் உடம்பில் ஐந்து மில்லியன் முடிகள் உள்ளன. தலையில் மட்டும் எண்பதாயிரம் முதல் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் முடிகள் உள்ளன. புரோட்டின் சத்தில் உள்ள கேரட்டின் என்கிற மூலப்பொருள்தான் முடிகள் வளர்வதற்குக் காரணமாக இருக்கிறது. ஆயுர்வேத வைத்திய முறையில் தலைமுடியுதிர்வை எவ்வாறு கட்டுப்படுத்தலாம்
ஆயுர்வேத மருத்துவத்தில் முடி உதிர்வுக்கான சிகிச்சை ஏதும் உண்டா?
மன உளைச்சல் காரணமாகவும், மஞ்சள் காமாலை, மலேரியா, தைபோயிட் போன்ற நோய்களாலும், சிகரெட் பிடிப்பதாலும், தலைமுடி உதிர முக்கியமான காரணங்களாகும். சில வகையான நோய் எதிர்ப்புச் சக்தி தரும் மாத்திரைகளை எடுக்கும்போது தலைமுடி உதிர ஆரம்பிக்கும். வெந்நீரில் குளிப்பதாலும், தலைமுடிக்கு சாயம் பூசுவதாலும் முடிகள் உதிரலாம்.
மேலும் மனித உடலில் சூடு அதிகம் காணப்படுவது தலைமுடி உதிர்வுக்கு பிரதான காரணியாக அமைந்துள்ளது. மனித உடலில் வெப்பம் இரு வழிகளில் வெளியேறுகின்றது. உச்சி தலையூடாகவும், கால் வெடிப்பின் ஊடாகவும் வெளியாகிறது. இரத்தக் கொதிப்பாகவும் உஷ்ணம் வெளிப்படுத்தப்படுகின்றது. இன்றைய காலகட்டத்தில் ஆண், பெண்கள் இருபாலாரும் மோட்டார் வாகனத்தில் செல்லும்போது தலைக்கவசத்தை அணிந்து செல்வதால் உச்சந்தலையின் வெப்பம் வெளியேற்றுவதற்கு தடையாக அமைந்துள்ளது. அத்தோடு வேலைத்தளங்களில் (ஏ.சி.) பொருத்தியிருப்பதால் தொழில் புரியும் அனைவரினதும் தலைமுடியின் வெப்பம் வெளியேற்றப்படாமல் குளிர்த்தன்மை அதிகரிப்பதன் காரணமாக இரத்த ஓட்டம் தடை படுகின்றது. அத்தோடு தலைமுடிகளுக்கு இரத்தத்தினூடாக செல்லுகின்ற போசனை பதார்த்தம் குறைவடைவதாலும், பரம்பரை ஒரு காரணமாக அமைக்கிறது. அத்தோடு உணவுகளில் விஷ பதார்த்தம் அதிகம் காணப்படுவதாலும் முடியுதிர்வதற்கு காரணமாக அமைகிறது.
ஆயுர்வேத சிகிச்சை முறை மூலம் இந்த பிரச்சினைக்கு தீர்வுண்டா?
தலைமுடியுதிர்வுக்கு மூலகாரணம் என்னவென்று முதலில் அறியவேண்டும். அதன் பின்னர் தான் சிகிச்சை அளிக்கவேண்டும். அதிகமானவர்களுக்கு பொடுகுத்தொல்லை ஒரு காரணமாக அமைந்துள்ளது. இதனால் தலைமுடி உதிர்கிறது. பலர் எம்மிடம் தலை முடியுதிர்கிறது என கூறிக்கொண்டு வருகிறார்கள். இவர்களுக்கு எடுத்த எடுப்பில் தலைமுடிக்கான எண்ணெய் வழங்க முடியாது. ஆனால் சிலருக்கு ஆயுர்வேத எண்ணெய் பாவிப்பதன் மூலம் சரியாகிவிடும். பலருக்கு இது சாத்தியமாகாது. சளிக்காரணமாகவும், பொடுகுத் தொல்லைக் காரணமாகவும் முடி உதிர்கிறது. இதை முதலில் குணப்படுத்திவிட்டு அதன் பிறகு தலைமுடி உதிர்வுக்கான சிகிச்சைமுறையை கையாளவேண்டும். தலைமுடிக்கு ஒழுங்காக எண்ணெய் சிகிச்சை வழங்கவேண்டும். குளிப்பதற்கான ஒழுக்க முறைகளை கடைபிடிக்கவேண்டும்
தலைமுடிக்கு எண்ணெய் வைப்பதற்கான முறை உள்ளதா?
தலைமுடிக்கு எண்ணெய் வைப்பதற்கு என ஒரு முறையுள்ளது. தலைமுடிக்கு எண்ணெய் வைக்கும் போது தலையை அழுத்தி தேய்க்கக்கூடாது. அதாவது முடி உதிரும் அளவுக்கு அழுத்தி தேய்க்க கூடாது. மிகவும் மெதுவாக சருமத்துக்கு படும்படி எண்ணெய் வைக்கவேண்டும் அத்தோடு மிகவும் மெதுவாக மசாஜ் செய்யவேண்டும். முடிக்கு வைக்காமல் தலையின் சருமத்துக்கு படும்படி வைக்கவேண்டும். அப்போது தான் முடிவளர்வதற்கு தேவையான போசனை கிடைக்கும். இதன் மூலம் நாளுக்கு நாள் நல்ல பயனை பெறலாம்.
நாளாந்தம் தலை குளிப்பதால் தலை முடிக்கு ஏதாவது பாதிப்புண்டா?
ஒவ்வொரு நாளும் நீராடுவதால் தலைமுடியுதிர்வுக்கு காரணம் என்று சொல்ல முடியாது. ஆனால் நீராடுவதற்கான ஒரு குறிப்பிட்டகால வரையறை உள்ளது. பொதுவாக விடியற்காலையிலிருந்து 12 மணிக்குள் நீராடினால் எந்தப் பிரச்சினையும் ஏற்படாது. மாலை நேரத்தில் நீராடுவதால் சளி, பீனிசம் போன்ற நோய்கள் ஏற்பட்டு முடி உதிர்வுக்கு காரணமாக அமைகின்றது. எனவே ஒவ்வொரு நாளும் நீராடுவதால் முடி உதிர்வதற்கு வாய்ப்பில்லை..
ஆண், பெண் இருபாலாருக்கும் முடியுதிர்வதற்கு வித்தியாசம் உள்ளதா?
பெண்களைப் பொறுத்தவரையில் பெண்களின் உடம்பில் ஏற்படும் ஹோர்மோன் மாற்றங்களால்தான் தலைமுடி உதிர்வதற்கு நிறைய வாய்ப்புகள் உண்டு. பெண்கள் பூப்படைந்தவுடன் அதாவது 12 முதல் 14 வயதுக்குள் நிறைய தலைமுடியை இழக்க நேரிடலாம், பொதுவாக பெண்களுக்கு 45–50 வயதுக்குட்பட்டவர்கள் மாதவிடாய் நிற்கிறபோது ஹோர்மோன் மாற்றத்தால் சருமத்தில் சுருக்கம் ஏற்படுதல், முடி உதிர்தல் போன்ற காரணிகளுக்கு வாய்ப்புள்ளது. கர்ப்பிணி பெண்களுக்கு விற்றமின், கனிப்பொருள் தேவைப்படுவதால் முடி உதிர்வுக் காரணமாக அமைகிறது. பிரசவம் முடிந்த சில மாதங்களுக்குள் முடியுதிரலாம். சில பெண்களுக்கு தைரோயிட்டு சம்பந்தமான பிரச்சினை, ஊட்டச்சத்து குறைவாக இருக்கும்போதும் முடி உதிர்கிறது. உதாரணமாக நம் இரத்தத்தில் இரும்புச் சத்து குறைந்தால், முடி அதிக அளவில் உதிரும். கர்ப்பத்தடை மாத்திரைகளை எடுப்பதால் பெண்களுக்கு அதிக அளவில் முடி உதிர வாய்ப்புள்ளது. முடி உதிர்வானது ஆண், பெண்கள் என வேறுபாடு இல்லை. ஒவ்வொருவரின் உடலின் மாற்றத்திற்கு ஏற்ப முடி உதிர்வுக் காரணமாக அமையலாம்.
இளைஞர்கள் பலருக்கு முடி உதிர்ந்து வழுக்கை நிலை ஏற்படுகின்றது. இதனை தடுப்பதற்கு ஏதும் வழிகள் உள்ளனவா?
ஆம், வழுக்கை தலை பிரச்சினையில் பெண்களை விட ஆண்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு முக்கிய காரணம், ஆண்கள் பெண்களை போல் தங்களின் முடிக்கு போதிய பராமரிப்புக்களை கொடுப்பதில்லை இதில் எல்லா ஆண்களையும் கூற முடியாது. ஒரு சிலரின் முறையான பராமரிப்பின்மையினால் இளம் பருவத்திலேயே முடி உதிர்தல் பிரச்சினைக்கு உள்ளாகி வழுக்கை விழுகிறது. ஆயுர்வேத சிகிச்சை முறையில் இதற்கான தீர்வுண்டு. இந்த சிகிச்சையை தொடர்ந்து மேற்கொள்ளவேண்டும். இவ்வாறு செய்தால் ஒரு வாரம் அல்லது ஒன்றரை வாரங்களில் முடியுதிர்வை கட்டுப்படுத்தலாம். ஆனால் பெரும்பாலானோர் ஒரு மாதத்தில் குணப்படுத்திவிடலாம். என்று நினைக்கிறார்கள். ஆனால் அவ்வாறு ஒருபோதும் சாத்தியமாகாது. ஆயுர்வேத சிகிச்சை முறையில் அதிகமாக முடியுதிர்வு ஏற்பட்டு தலை வழுக்கை உள்ளவர் மிக கவனத்துடன் சிகிச்சை பெறவேண்டும் முதலில் தலைகுளிப்பதை ஒழுங்காக கடைப்பிடிக்க வேண்டும்.
மேலும் தலைமுடிக்கு ஒரு கிரமமான முறையில் எண்ணெய் பாவிக்க முதல் மூன்றுமாதம் அடுத்து ஆறுமாதம், ஒருவருடகாலம் என்ற படிமுறைக்கு அமைவாக தலைமுடிக்கு எண்ணெய் வைத்து வந்தால் தலைமுடி உதிர்வை கட்டுப் படுத்த முடியும் இதே சமயம் வெவ்வேறு எண்ணெய்களை தலைக்கு உபயோகிப்பதால் முடிக்கு அதிக பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. தலைசருமம் உலர்ந்து தலைமுடி உதிர்வுக்கு காரணமாக அமையலாம்.
ஒரு சில இளைஞர்களின் தலையில் எவ்வித முறையில் தலைமுடி உதிர்வு ஏற்படுகின்றது?
தலையின் முன்பகுதி, தலையின் பின் பகுதி, தலையின் மத்திய பகுதி என பலவிதமாக தலைமுடிஉதிர்கிறது. சிலருக்கு ஒரு ரூபா வடிவில் வட்டம் வட்டமாக தலைமயிர் உதிர்கிறது. இது ஒரு வைரஸ் கிருமியின் தாக்கமாக அமைகிறது. இவ்வாறு உள்ளவர்கள் உடனடியாக ஆயுர்வேத வைத்தியரை நாடி சிகிச்சை பெற தவறும் பட்சத்தில் முழு தலைமுடியையும் இழக்க நேரிடலாம்.
amns-dental
உணவுப் பழக்கவழக்கங்களும் தலைமயிர் உதிர்வதற்கு ஒரு காரணமாக அமையலாமா?
ஆம், ஆயுர்வேத முறையில் நோக்கும் போது உணவு முறையில் அதிக கவனம் செலுத்தவேண்டும். உதாரணமாக மாசி மீன், தக்காளி, அச்சாறு, வினாகிரி உணவில் சேர்ப்பதால் உஷ்ணம் அதிகரிக்கும். உணவு விடயத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். சூடான உணவுகளை உட்கொள்ளக் கூடாது. எமது முடியைப் பாதுகாக்க வேண்டுமானால் அதிக குளிர்ச்சியானதும் அதிக போசனை உள்ளதுமான பொருட்களை எடுக்க வேண்டும். தினமும் அதிக நீர் அருந்த வேண்டும். தினமும் ஏதாவது ஒரு வகை கீரையை உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும்.
தலைமயிர் உதிர்வது பரம்பரை நோயா?
அவ்வாறு கூறமுடியாது. தாய், தந்தைக்கு முடி உதிர்வு ஏற்படுவதால் பிள்ளைகளுக்கு உதிர்வு ஏற்படாது. அதேநேரத்தில் தாய், தந்தையருக்கு தலைமுடி உதிராமல் பிள்ளைகளுக்கு உதிரலாம் சூழல் மாற்றம், சரும வறட்சியடைவதாலும், பொடுக்குத் தொல்லையாலும் சிலவேளை 50 சத வீதத்தினருக்கு பரம்பரை நோயாகவும் இருக்கலாம்.
இளம் நரையைத் தடுப்பதற்காக ஆயுர்வேத முறையில் சிகிச்சை உண்டா?
வயதானவர்களுக்கு கறுத்த முடி வெளுப்படைவது இயல்பான ஒன்று. ஆனால் இன்று 20 வயதான இளைஞர்களுக்கு தலைமுடியானது வெளுத்து முதுமையான தோற்றத்தைத் தருகிறது. அதற்கு காரணம் சத்தான உணவு இல்லாமை, முறையான முடி பராமரிப்பின்மை மற்றும் மனக் கவலை மேலும் உடலில் ஏற்படும் நாட்பட்ட நோய்களாலும் இள நரை ஏற்படுகிறது. அதிலும் குறிப்பாக மூக்கடைப்பு, நீண்ட நாள் மலச்சிக்கல் போன்றவையாலும் அதிக சிறுவர்களுக்கு முடி வெள்ளை நிறமாற்றத்துக்கு மண்டைச் சளி ஒரு காரணமாக அமைகிறது. சளியை ஆரம்ப காலத்திலே கவனித்து சிகிச்சை பெறவேண்டும். இன்றைய நவீன காலத்தில் பல வகையான ஜெல் வகைகள் சந்தைக்கு வந்துள்ள காரணத்தினால் சிறுவர்கள், இளைஞர்கள் அனைவரும் இவற்றை உபயோகித்து நன்றாக தலையை நீரினால் சுத்தம் செய்யாமல் விடுதல் போன்ற காரணங்களினால் முடி நிறமாறலாம். ஜெல் பாவித்துவிட்டு ஆகக் குறைந்தது 12 மணித்தியாலம் அல்லது 24 மணித்தியாலத்தில் நன்றாக நீரினால் அலச வேண்டும். இல்லாவிட்டால் நிறமாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. அத்தோடு இரண்டு மூன்று சிறு சிறு துளைகள் மண்டை யோட்டில் ஏற்பட வாய்ப்புள்ளது.
இன்றைய நவீன காலத்திற்கு ஏற்றவாறு அழகு நிலையத்திற்கு சென்று முடிக்கு நிறமாற்றம் செய்வதால் ஏதாவது பிரச்சினை ஏற்படுமா?
ஆம். அழகு நிலையத்துக்கு சென்று முடிகளை நிறமாற்றுதல் மற்றும் அயனிங் செய்தல் இவற்றால் முடி பாதிப்புற அதிக வாய்ப்புகள் உண்டு. காரணம் இங்கு அதிகளவில் இரசாயன பொருள் சேர்ப்பதால் நீண்ட காலத்துக்கு பிறகு முடிக்கு பாதிப்பு ஏற்படலாம். சிலர் ஷெம்போவை பாவித்துவிட்டு இதற்கு ஏற்ற கண்டிசன் பாவிப்பதில்லை. இதனால் இயற்கையான போசனை பொருட்கள் இழக்கப்படுகின்றன. முடிஉடைதல், செம்பட்டையாகுதல், அடர்த்தி குறைதல், முடிவெடித்தல், முடியின் தோற்றத்தில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. இதற்கு சவர்க்காரத்தை பாவிப்பதே நல்லது.
பொதுவாக பாடசாலை செல்லும் குழந்தைகளுக்கு தலைமுடியில் பேன்கள் தோன்றி சிரமத்தைக் கொடுக்கும். இந்த பேன்களை முற்றிலும் அழிப்பதற்கான ஆயுர்வேத மருத்துவ முறையில் சிகிச்சை உண்டா?
நம்மில் சிலர் தலைமுடியை சரியாக சுத்தம் செய்வதில்லை. அதாவது ஒழுங்காக நீராடுவதில்லை. இதனால் பொடுகு, தலையிலுள்ள அசுத்தம் காரணமாக பேன் உற்பத்தியாகிறது. அத்தோடு ஏனைய மாணவர்களிடமிருந்து பரவுகின்றது. இதற்கு ஆயுர்வேத முறையில் சிகிச்சை அளித்து இதை முற்றாகக் குணப்படுத்தலாம். உழுந்தை அவித்து ஓரிரு வாரங்களுக்கு தலைக்கு வைத்து நீராடி வந்தால் கட்டுப்படுத்தலாம்.
இன்று நாம் பார்த்தோமேயானால், எல்லோரும் அவசர உலகத்திலுள்ளோம் இதன் காரணமாக பெரும்பாலானோர் சரியான முறையில் குளிப்பதில்லை. உதாரணமாக ஜெல் வகைகள் பாவித்து விட்டு தலைமுடியை 12 மணித்தியாலத்துக்குள் அல்லது 24 மணித்தியாலத்தில் ஒழுங்காக தலைமுடியை சுத்தம் செய்யாவிட்டால் முடி உதிர்வுக்கு ஒரு காரணமாக அமையலாம். அத்தோடு இள நரை ஏற்பட வாய்ப்புள்ளது. தலைமுடி ஏதோ வளர்த்தோம் என்று அதை பெரும்பாலானோர் கருத்தில் கொள்வதில்லை. உணவு பழக்கம் மிக முக்கியமானது. கடைக்கு சென்று சுவை என்பதற்காக உண்பதால் அது எமது உடலின் ஆரோக்கியத்தை பாதிக்கிறது என்பதை சிலர் கருத்தில் கொள்வதில்லை. உடலுக்கு அதிக சூட்டை ஏற்படுத்தக் கூடிய உணவுகளை தொடர்ந்து உண்பதால் பாதிப்பை ஏற்படுத்தலாம். தலைமுடி உதிர்வு மாத்திரமல்லாமல் சிறுநீரக பாதிப்பு, கொழுப்பு போன்ற நோய்களுக்கு மூலக்காரணமாக அமைகிறது. இதற்காக நான் உணவை உண்ணவேண்டாம் என்று சொல்லவில்லை. உங்களின் உடலின் தன்மைக்கு ஏற்ப எடுத்தால் ஏற்புடையதாக இருக்கும்.
பால், யோகட், அதிக கீரைவகைகள் உதாரணமாக வல்லாரை, பொன்னாங் கண்ணி போன்றவற்றை உண்பதால் அதிக போசாக்கை பெற முடியும். அதிகமானோர் தலைமுடிக்கு எண்ணெய் பாவிப்பது குறைவாக காணப்படுகின்றது. கட்டாயம் தலைமுடிக்கு எண்ணெய் தேய்க்க வேண்டும். தலைக்கு எண்ணெய் வைத்து மசாஜ் செய்யவேண்டும். தலையின் சருமத்திற்கு படும்படியாக எண்ணெய் தேய்க்கவேண்டும். அப்போது தான் தலைமயிரின் ஊடாக சருமத்திற்கு எண்ணெய் சென்று போசனை அதிகரிக்கும். வாரத்தில் மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு எண்ணெய் தேய்க்கவேண்டும். வேலைவிட்டு வந்து மாலை நேரத்தில் நீராடிவிட்டு தலைமுடிக்கு எண்ணெய் வைப்பதால் எந்த ஒரு பயனும் கிடையாது. இவ்வாறு தலைமுடிக்கு எண்ணெய் வைப்பதை விட வைக்காமல் விடுவது சிறந்தது. காரணம் இளநரை ஏற்படுவதற்கு இது ஒரு காரணமாக அமையும். காலையில் நீராட வேண்டும். தலைமுடி நன்றாக உலர்ந்த பின் தலைமுடிக்கு எண்ணெய் வைக்க வேண்டும். ஆயுர்வேத எண்ணெய் என்று அவசியமில்லை. நல்ல சுத்தமான தேங்காயெண்ணெயை காலையில் தான் வைக்கவேண்டும். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். ஒரு நாளைக்கு மூன்றரை அரை லீற்றருக்கு குறையாமல் தண்ணீர் அருந்தவேண்டும்.
ஆரோக்கியத்துக்கும் ஒருபடி மேலாக அழகுக்கு அக்கறை செலுத்தும் காலம் இது. அந்த வகையில் ஆண், பெண் இருபாலாருக்குமே தலைமுடி உதிர்வு பிரச்சினையாக உள்ளது.
நம் உடம்பில் ஐந்து மில்லியன் முடிகள் உள்ளன. தலையில் மட்டும் எண்பதாயிரம் முதல் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் முடிகள் உள்ளன. புரோட்டின் சத்தில் உள்ள கேரட்டின் என்கிற மூலப்பொருள்தான் முடிகள் வளர்வதற்குக் காரணமாக இருக்கிறது. ஆயுர்வேத வைத்திய முறையில் தலைமுடியுதிர்வை எவ்வாறு கட்டுப்படுத்தலாம்
ஆயுர்வேத மருத்துவத்தில் முடி உதிர்வுக்கான சிகிச்சை ஏதும் உண்டா?
மன உளைச்சல் காரணமாகவும், மஞ்சள் காமாலை, மலேரியா, தைபோயிட் போன்ற நோய்களாலும், சிகரெட் பிடிப்பதாலும், தலைமுடி உதிர முக்கியமான காரணங்களாகும். சில வகையான நோய் எதிர்ப்புச் சக்தி தரும் மாத்திரைகளை எடுக்கும்போது தலைமுடி உதிர ஆரம்பிக்கும். வெந்நீரில் குளிப்பதாலும், தலைமுடிக்கு சாயம் பூசுவதாலும் முடிகள் உதிரலாம்.
மேலும் மனித உடலில் சூடு அதிகம் காணப்படுவது தலைமுடி உதிர்வுக்கு பிரதான காரணியாக அமைந்துள்ளது. மனித உடலில் வெப்பம் இரு வழிகளில் வெளியேறுகின்றது. உச்சி தலையூடாகவும், கால் வெடிப்பின் ஊடாகவும் வெளியாகிறது. இரத்தக் கொதிப்பாகவும் உஷ்ணம் வெளிப்படுத்தப்படுகின்றது. இன்றைய காலகட்டத்தில் ஆண், பெண்கள் இருபாலாரும் மோட்டார் வாகனத்தில் செல்லும்போது தலைக்கவசத்தை அணிந்து செல்வதால் உச்சந்தலையின் வெப்பம் வெளியேற்றுவதற்கு தடையாக அமைந்துள்ளது. அத்தோடு வேலைத்தளங்களில் (ஏ.சி.) பொருத்தியிருப்பதால் தொழில் புரியும் அனைவரினதும் தலைமுடியின் வெப்பம் வெளியேற்றப்படாமல் குளிர்த்தன்மை அதிகரிப்பதன் காரணமாக இரத்த ஓட்டம் தடை படுகின்றது. அத்தோடு தலைமுடிகளுக்கு இரத்தத்தினூடாக செல்லுகின்ற போசனை பதார்த்தம் குறைவடைவதாலும், பரம்பரை ஒரு காரணமாக அமைக்கிறது. அத்தோடு உணவுகளில் விஷ பதார்த்தம் அதிகம் காணப்படுவதாலும் முடியுதிர்வதற்கு காரணமாக அமைகிறது.
ஆயுர்வேத சிகிச்சை முறை மூலம் இந்த பிரச்சினைக்கு தீர்வுண்டா?
தலைமுடியுதிர்வுக்கு மூலகாரணம் என்னவென்று முதலில் அறியவேண்டும். அதன் பின்னர் தான் சிகிச்சை அளிக்கவேண்டும். அதிகமானவர்களுக்கு பொடுகுத்தொல்லை ஒரு காரணமாக அமைந்துள்ளது. இதனால் தலைமுடி உதிர்கிறது. பலர் எம்மிடம் தலை முடியுதிர்கிறது என கூறிக்கொண்டு வருகிறார்கள். இவர்களுக்கு எடுத்த எடுப்பில் தலைமுடிக்கான எண்ணெய் வழங்க முடியாது. ஆனால் சிலருக்கு ஆயுர்வேத எண்ணெய் பாவிப்பதன் மூலம் சரியாகிவிடும். பலருக்கு இது சாத்தியமாகாது. சளிக்காரணமாகவும், பொடுகுத் தொல்லைக் காரணமாகவும் முடி உதிர்கிறது. இதை முதலில் குணப்படுத்திவிட்டு அதன் பிறகு தலைமுடி உதிர்வுக்கான சிகிச்சைமுறையை கையாளவேண்டும். தலைமுடிக்கு ஒழுங்காக எண்ணெய் சிகிச்சை வழங்கவேண்டும். குளிப்பதற்கான ஒழுக்க முறைகளை கடைபிடிக்கவேண்டும்
தலைமுடிக்கு எண்ணெய் வைப்பதற்கான முறை உள்ளதா?
தலைமுடிக்கு எண்ணெய் வைப்பதற்கு என ஒரு முறையுள்ளது. தலைமுடிக்கு எண்ணெய் வைக்கும் போது தலையை அழுத்தி தேய்க்கக்கூடாது. அதாவது முடி உதிரும் அளவுக்கு அழுத்தி தேய்க்க கூடாது. மிகவும் மெதுவாக சருமத்துக்கு படும்படி எண்ணெய் வைக்கவேண்டும் அத்தோடு மிகவும் மெதுவாக மசாஜ் செய்யவேண்டும். முடிக்கு வைக்காமல் தலையின் சருமத்துக்கு படும்படி வைக்கவேண்டும். அப்போது தான் முடிவளர்வதற்கு தேவையான போசனை கிடைக்கும். இதன் மூலம் நாளுக்கு நாள் நல்ல பயனை பெறலாம்.
நாளாந்தம் தலை குளிப்பதால் தலை முடிக்கு ஏதாவது பாதிப்புண்டா?
ஒவ்வொரு நாளும் நீராடுவதால் தலைமுடியுதிர்வுக்கு காரணம் என்று சொல்ல முடியாது. ஆனால் நீராடுவதற்கான ஒரு குறிப்பிட்டகால வரையறை உள்ளது. பொதுவாக விடியற்காலையிலிருந்து 12 மணிக்குள் நீராடினால் எந்தப் பிரச்சினையும் ஏற்படாது. மாலை நேரத்தில் நீராடுவதால் சளி, பீனிசம் போன்ற நோய்கள் ஏற்பட்டு முடி உதிர்வுக்கு காரணமாக அமைகின்றது. எனவே ஒவ்வொரு நாளும் நீராடுவதால் முடி உதிர்வதற்கு வாய்ப்பில்லை..
ஆண், பெண் இருபாலாருக்கும் முடியுதிர்வதற்கு வித்தியாசம் உள்ளதா?
பெண்களைப் பொறுத்தவரையில் பெண்களின் உடம்பில் ஏற்படும் ஹோர்மோன் மாற்றங்களால்தான் தலைமுடி உதிர்வதற்கு நிறைய வாய்ப்புகள் உண்டு. பெண்கள் பூப்படைந்தவுடன் அதாவது 12 முதல் 14 வயதுக்குள் நிறைய தலைமுடியை இழக்க நேரிடலாம், பொதுவாக பெண்களுக்கு 45–50 வயதுக்குட்பட்டவர்கள் மாதவிடாய் நிற்கிறபோது ஹோர்மோன் மாற்றத்தால் சருமத்தில் சுருக்கம் ஏற்படுதல், முடி உதிர்தல் போன்ற காரணிகளுக்கு வாய்ப்புள்ளது. கர்ப்பிணி பெண்களுக்கு விற்றமின், கனிப்பொருள் தேவைப்படுவதால் முடி உதிர்வுக் காரணமாக அமைகிறது. பிரசவம் முடிந்த சில மாதங்களுக்குள் முடியுதிரலாம். சில பெண்களுக்கு தைரோயிட்டு சம்பந்தமான பிரச்சினை, ஊட்டச்சத்து குறைவாக இருக்கும்போதும் முடி உதிர்கிறது. உதாரணமாக நம் இரத்தத்தில் இரும்புச் சத்து குறைந்தால், முடி அதிக அளவில் உதிரும். கர்ப்பத்தடை மாத்திரைகளை எடுப்பதால் பெண்களுக்கு அதிக அளவில் முடி உதிர வாய்ப்புள்ளது. முடி உதிர்வானது ஆண், பெண்கள் என வேறுபாடு இல்லை. ஒவ்வொருவரின் உடலின் மாற்றத்திற்கு ஏற்ப முடி உதிர்வுக் காரணமாக அமையலாம்.
இளைஞர்கள் பலருக்கு முடி உதிர்ந்து வழுக்கை நிலை ஏற்படுகின்றது. இதனை தடுப்பதற்கு ஏதும் வழிகள் உள்ளனவா?
ஆம், வழுக்கை தலை பிரச்சினையில் பெண்களை விட ஆண்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு முக்கிய காரணம், ஆண்கள் பெண்களை போல் தங்களின் முடிக்கு போதிய பராமரிப்புக்களை கொடுப்பதில்லை இதில் எல்லா ஆண்களையும் கூற முடியாது. ஒரு சிலரின் முறையான பராமரிப்பின்மையினால் இளம் பருவத்திலேயே முடி உதிர்தல் பிரச்சினைக்கு உள்ளாகி வழுக்கை விழுகிறது. ஆயுர்வேத சிகிச்சை முறையில் இதற்கான தீர்வுண்டு. இந்த சிகிச்சையை தொடர்ந்து மேற்கொள்ளவேண்டும். இவ்வாறு செய்தால் ஒரு வாரம் அல்லது ஒன்றரை வாரங்களில் முடியுதிர்வை கட்டுப்படுத்தலாம். ஆனால் பெரும்பாலானோர் ஒரு மாதத்தில் குணப்படுத்திவிடலாம். என்று நினைக்கிறார்கள். ஆனால் அவ்வாறு ஒருபோதும் சாத்தியமாகாது. ஆயுர்வேத சிகிச்சை முறையில் அதிகமாக முடியுதிர்வு ஏற்பட்டு தலை வழுக்கை உள்ளவர் மிக கவனத்துடன் சிகிச்சை பெறவேண்டும் முதலில் தலைகுளிப்பதை ஒழுங்காக கடைப்பிடிக்க வேண்டும்.
மேலும் தலைமுடிக்கு ஒரு கிரமமான முறையில் எண்ணெய் பாவிக்க முதல் மூன்றுமாதம் அடுத்து ஆறுமாதம், ஒருவருடகாலம் என்ற படிமுறைக்கு அமைவாக தலைமுடிக்கு எண்ணெய் வைத்து வந்தால் தலைமுடி உதிர்வை கட்டுப் படுத்த முடியும் இதே சமயம் வெவ்வேறு எண்ணெய்களை தலைக்கு உபயோகிப்பதால் முடிக்கு அதிக பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. தலைசருமம் உலர்ந்து தலைமுடி உதிர்வுக்கு காரணமாக அமையலாம்.
ஒரு சில இளைஞர்களின் தலையில் எவ்வித முறையில் தலைமுடி உதிர்வு ஏற்படுகின்றது?
தலையின் முன்பகுதி, தலையின் பின் பகுதி, தலையின் மத்திய பகுதி என பலவிதமாக தலைமுடிஉதிர்கிறது. சிலருக்கு ஒரு ரூபா வடிவில் வட்டம் வட்டமாக தலைமயிர் உதிர்கிறது. இது ஒரு வைரஸ் கிருமியின் தாக்கமாக அமைகிறது. இவ்வாறு உள்ளவர்கள் உடனடியாக ஆயுர்வேத வைத்தியரை நாடி சிகிச்சை பெற தவறும் பட்சத்தில் முழு தலைமுடியையும் இழக்க நேரிடலாம்.
amns-dental
உணவுப் பழக்கவழக்கங்களும் தலைமயிர் உதிர்வதற்கு ஒரு காரணமாக அமையலாமா?
ஆம், ஆயுர்வேத முறையில் நோக்கும் போது உணவு முறையில் அதிக கவனம் செலுத்தவேண்டும். உதாரணமாக மாசி மீன், தக்காளி, அச்சாறு, வினாகிரி உணவில் சேர்ப்பதால் உஷ்ணம் அதிகரிக்கும். உணவு விடயத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். சூடான உணவுகளை உட்கொள்ளக் கூடாது. எமது முடியைப் பாதுகாக்க வேண்டுமானால் அதிக குளிர்ச்சியானதும் அதிக போசனை உள்ளதுமான பொருட்களை எடுக்க வேண்டும். தினமும் அதிக நீர் அருந்த வேண்டும். தினமும் ஏதாவது ஒரு வகை கீரையை உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும்.
தலைமயிர் உதிர்வது பரம்பரை நோயா?
அவ்வாறு கூறமுடியாது. தாய், தந்தைக்கு முடி உதிர்வு ஏற்படுவதால் பிள்ளைகளுக்கு உதிர்வு ஏற்படாது. அதேநேரத்தில் தாய், தந்தையருக்கு தலைமுடி உதிராமல் பிள்ளைகளுக்கு உதிரலாம் சூழல் மாற்றம், சரும வறட்சியடைவதாலும், பொடுக்குத் தொல்லையாலும் சிலவேளை 50 சத வீதத்தினருக்கு பரம்பரை நோயாகவும் இருக்கலாம்.
இளம் நரையைத் தடுப்பதற்காக ஆயுர்வேத முறையில் சிகிச்சை உண்டா?
வயதானவர்களுக்கு கறுத்த முடி வெளுப்படைவது இயல்பான ஒன்று. ஆனால் இன்று 20 வயதான இளைஞர்களுக்கு தலைமுடியானது வெளுத்து முதுமையான தோற்றத்தைத் தருகிறது. அதற்கு காரணம் சத்தான உணவு இல்லாமை, முறையான முடி பராமரிப்பின்மை மற்றும் மனக் கவலை மேலும் உடலில் ஏற்படும் நாட்பட்ட நோய்களாலும் இள நரை ஏற்படுகிறது. அதிலும் குறிப்பாக மூக்கடைப்பு, நீண்ட நாள் மலச்சிக்கல் போன்றவையாலும் அதிக சிறுவர்களுக்கு முடி வெள்ளை நிறமாற்றத்துக்கு மண்டைச் சளி ஒரு காரணமாக அமைகிறது. சளியை ஆரம்ப காலத்திலே கவனித்து சிகிச்சை பெறவேண்டும். இன்றைய நவீன காலத்தில் பல வகையான ஜெல் வகைகள் சந்தைக்கு வந்துள்ள காரணத்தினால் சிறுவர்கள், இளைஞர்கள் அனைவரும் இவற்றை உபயோகித்து நன்றாக தலையை நீரினால் சுத்தம் செய்யாமல் விடுதல் போன்ற காரணங்களினால் முடி நிறமாறலாம். ஜெல் பாவித்துவிட்டு ஆகக் குறைந்தது 12 மணித்தியாலம் அல்லது 24 மணித்தியாலத்தில் நன்றாக நீரினால் அலச வேண்டும். இல்லாவிட்டால் நிறமாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. அத்தோடு இரண்டு மூன்று சிறு சிறு துளைகள் மண்டை யோட்டில் ஏற்பட வாய்ப்புள்ளது.
இன்றைய நவீன காலத்திற்கு ஏற்றவாறு அழகு நிலையத்திற்கு சென்று முடிக்கு நிறமாற்றம் செய்வதால் ஏதாவது பிரச்சினை ஏற்படுமா?
ஆம். அழகு நிலையத்துக்கு சென்று முடிகளை நிறமாற்றுதல் மற்றும் அயனிங் செய்தல் இவற்றால் முடி பாதிப்புற அதிக வாய்ப்புகள் உண்டு. காரணம் இங்கு அதிகளவில் இரசாயன பொருள் சேர்ப்பதால் நீண்ட காலத்துக்கு பிறகு முடிக்கு பாதிப்பு ஏற்படலாம். சிலர் ஷெம்போவை பாவித்துவிட்டு இதற்கு ஏற்ற கண்டிசன் பாவிப்பதில்லை. இதனால் இயற்கையான போசனை பொருட்கள் இழக்கப்படுகின்றன. முடிஉடைதல், செம்பட்டையாகுதல், அடர்த்தி குறைதல், முடிவெடித்தல், முடியின் தோற்றத்தில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. இதற்கு சவர்க்காரத்தை பாவிப்பதே நல்லது.
பொதுவாக பாடசாலை செல்லும் குழந்தைகளுக்கு தலைமுடியில் பேன்கள் தோன்றி சிரமத்தைக் கொடுக்கும். இந்த பேன்களை முற்றிலும் அழிப்பதற்கான ஆயுர்வேத மருத்துவ முறையில் சிகிச்சை உண்டா?
நம்மில் சிலர் தலைமுடியை சரியாக சுத்தம் செய்வதில்லை. அதாவது ஒழுங்காக நீராடுவதில்லை. இதனால் பொடுகு, தலையிலுள்ள அசுத்தம் காரணமாக பேன் உற்பத்தியாகிறது. அத்தோடு ஏனைய மாணவர்களிடமிருந்து பரவுகின்றது. இதற்கு ஆயுர்வேத முறையில் சிகிச்சை அளித்து இதை முற்றாகக் குணப்படுத்தலாம். உழுந்தை அவித்து ஓரிரு வாரங்களுக்கு தலைக்கு வைத்து நீராடி வந்தால் கட்டுப்படுத்தலாம்.
இன்று நாம் பார்த்தோமேயானால், எல்லோரும் அவசர உலகத்திலுள்ளோம் இதன் காரணமாக பெரும்பாலானோர் சரியான முறையில் குளிப்பதில்லை. உதாரணமாக ஜெல் வகைகள் பாவித்து விட்டு தலைமுடியை 12 மணித்தியாலத்துக்குள் அல்லது 24 மணித்தியாலத்தில் ஒழுங்காக தலைமுடியை சுத்தம் செய்யாவிட்டால் முடி உதிர்வுக்கு ஒரு காரணமாக அமையலாம். அத்தோடு இள நரை ஏற்பட வாய்ப்புள்ளது. தலைமுடி ஏதோ வளர்த்தோம் என்று அதை பெரும்பாலானோர் கருத்தில் கொள்வதில்லை. உணவு பழக்கம் மிக முக்கியமானது. கடைக்கு சென்று சுவை என்பதற்காக உண்பதால் அது எமது உடலின் ஆரோக்கியத்தை பாதிக்கிறது என்பதை சிலர் கருத்தில் கொள்வதில்லை. உடலுக்கு அதிக சூட்டை ஏற்படுத்தக் கூடிய உணவுகளை தொடர்ந்து உண்பதால் பாதிப்பை ஏற்படுத்தலாம். தலைமுடி உதிர்வு மாத்திரமல்லாமல் சிறுநீரக பாதிப்பு, கொழுப்பு போன்ற நோய்களுக்கு மூலக்காரணமாக அமைகிறது. இதற்காக நான் உணவை உண்ணவேண்டாம் என்று சொல்லவில்லை. உங்களின் உடலின் தன்மைக்கு ஏற்ப எடுத்தால் ஏற்புடையதாக இருக்கும்.
பால், யோகட், அதிக கீரைவகைகள் உதாரணமாக வல்லாரை, பொன்னாங் கண்ணி போன்றவற்றை உண்பதால் அதிக போசாக்கை பெற முடியும். அதிகமானோர் தலைமுடிக்கு எண்ணெய் பாவிப்பது குறைவாக காணப்படுகின்றது. கட்டாயம் தலைமுடிக்கு எண்ணெய் தேய்க்க வேண்டும். தலைக்கு எண்ணெய் வைத்து மசாஜ் செய்யவேண்டும். தலையின் சருமத்திற்கு படும்படியாக எண்ணெய் தேய்க்கவேண்டும். அப்போது தான் தலைமயிரின் ஊடாக சருமத்திற்கு எண்ணெய் சென்று போசனை அதிகரிக்கும். வாரத்தில் மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு எண்ணெய் தேய்க்கவேண்டும். வேலைவிட்டு வந்து மாலை நேரத்தில் நீராடிவிட்டு தலைமுடிக்கு எண்ணெய் வைப்பதால் எந்த ஒரு பயனும் கிடையாது. இவ்வாறு தலைமுடிக்கு எண்ணெய் வைப்பதை விட வைக்காமல் விடுவது சிறந்தது. காரணம் இளநரை ஏற்படுவதற்கு இது ஒரு காரணமாக அமையும். காலையில் நீராட வேண்டும். தலைமுடி நன்றாக உலர்ந்த பின் தலைமுடிக்கு எண்ணெய் வைக்க வேண்டும். ஆயுர்வேத எண்ணெய் என்று அவசியமில்லை. நல்ல சுத்தமான தேங்காயெண்ணெயை காலையில் தான் வைக்கவேண்டும். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். ஒரு நாளைக்கு மூன்றரை அரை லீற்றருக்கு குறையாமல் தண்ணீர் அருந்தவேண்டும்.